பொருட்களை வாங்குதல்
சகல நகரங்களிலும்;, ஆனால் ஒரு சில கிராமங்களிலும் பெரிய பல்பொருள் அங்காடிகள் காணப்படுகின்றன. அங்கே நாளாந்த தேவைக்கான அநேகமான பொருட்களை நீங்கள் வாங்கலாம். பாண் , இறைச்சி, பழவகை மற்றும் மரக்கறி, பால் மற்றும் யோகட்,சொக்கலேட், சுத்திகரிக்கும் பொருட்கள் மற்றும் கடதாசி வகைகள். ஜேர்மனியில் களஞ்சியங்கள் பெரும்பாலும் மாறுபட்ட நேரங்களில் திறக்கப்படுகின்றன. இப்பல்பொருள் அங்காடிகள் சாதாரணமாக காலை 7.00 மணியிலிருந்து ஆகக் குறைந்தது இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.